பிரதமர் வருகையையொட்டி புதுப்பொலிவு பெற்றது மாமல்லபுரம் - பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு
#CaptainNews | #TamilNews
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபரின் வருகையையொட்டி புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் மாமல்லபுரத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் வரும் 11-ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். அப்போது, முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதோடு, மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும் தலைவர்கள் பார்வையிட உள்ளனர். இதனையொட்டி, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம், கடற்கரை கோயில், போன்ற பகுதிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மின்விளக்குகளால் அலங்கரிக்கபட்டு அனைத்து புரதான சின்னங்களும் விளக்கொளியில் மிளிருகின்றன. நீண்ட காலத்திற்கு பிறகு மாமல்லபுரம் புராதன சின்னங்கள் அனைத்தும் புதுப்பொலிவு பெற்றுள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும், பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டுள்ளதால் நீண்ட தூரத்தில் நின்று புகைப்படம் எடுத்துச் செல்வதாக சுற்றுலாப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். புராதன சின்னங்களை பார்வையிட நேற்று முதல் 13-ஆம் தேதிவரை சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
#CaptainNews | #TamilNews
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபரின் வருகையையொட்டி புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் மாமல்லபுரத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் வரும் 11-ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். அப்போது, முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதோடு, மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும் தலைவர்கள் பார்வையிட உள்ளனர். இதனையொட்டி, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம், கடற்கரை கோயில், போன்ற பகுதிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மின்விளக்குகளால் அலங்கரிக்கபட்டு அனைத்து புரதான சின்னங்களும் விளக்கொளியில் மிளிருகின்றன. நீண்ட காலத்திற்கு பிறகு மாமல்லபுரம் புராதன சின்னங்கள் அனைத்தும் புதுப்பொலிவு பெற்றுள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும், பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டுள்ளதால் நீண்ட தூரத்தில் நின்று புகைப்படம் எடுத்துச் செல்வதாக சுற்றுலாப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். புராதன சின்னங்களை பார்வையிட நேற்று முதல் 13-ஆம் தேதிவரை சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
பிரதமர் வருகையையொட்டி புதுப்பொலிவு பெற்றது மாமல்லபுரம் - பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு live tamil news 7 tv channels | |
2 Likes | 2 Dislikes |
40 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 8 Oct 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét